ஜனாதிபதி அனுரகுமாரதிஸாநாயக்கவுக்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டை மென்மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதோடு, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.