மன்னார் செயலகத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்ட வாக்குப்பெட்டிகள்..!

மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள்

இன்று சனிக்கிழமை (21.09)காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் நிலையமான மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு  நிலையங்களில்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்புகள் இடம் பெற்றது.

மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில்

65 ,535 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன் பிரகாரம் மாவட்டத்தில் மொத்தமாக 72.33 வீத வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது வாக்குப் பெட்டிகள் முழுமையாக வாக்கு என்னும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் நிருபர்

வாஸ் கூஞ்ஞ