ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுற்றது

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தது.

நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (21) காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.