நாளை (21) வழமை போன்று புகையிரதே சேவை நடைபெறும்

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நாளைய தினம் (21) புகையிரத சேவை வழமை போல் செயற்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என். இந்திபொலகே தெரிவித்தார்.

தேர்தல் தினத்தன்று புகையிரத சேவையின் செயற்பாடு தொடர்பாக அரசாங்க உத்தியோகபூர்வ செய்தி இணையதளத்திற்கு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அதன்படி நாளை சனிக்கிழமை சேவையில் ஈடுபடும் புகையிரதங்கள் அனைத்து புகையிரதப் பாதைகளில் வழமை போன்று செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் ஜே.என். இந்திபொலகேன மேலும் சுட்டிக்காட்டினார்.