யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பம்.

நாளைய தினம் (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதம் வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (20.09.2024) காலை 07.15 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இவ் நியமனக் கடிதம் வழங்களைத் தொடர்ந்து சரியாக 08.30 மணிக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டி விநியோகம் ஆரம்பமாகியது.