மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி..!

தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.