தபால் மூலம் வாக்களிப்பிற்கு இன்று (12) இறுதி நாள்

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி நாள் இன்று (செப்டம்பர் 12 ) ஆகும்.

கடந்த நான்காம் திகதி தபால் மூல வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன் செப்டம்பர் ஐந்தாம் மற்றும் ஆறாம் திகதிகளில் தபால் மூல வாக்களிக்களிப்பு இடம் பெற்றது.

எனினும் இந்த திகதிகளில் வாக்களிக்கத் தவறிய அரசாங்க ஊழியர்களுக்காக நேற்றும் (11) இன்றும் (12) சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் தபால் மூல வாக்களிப்புக்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்ட இறுதி தினம் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இன்றாகும்.