ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீடு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீட்டு நிகழ்வு செப்டெம்பர் 4 ஆம் திகதி ITC ரத்னதிப சங்கம் மண்டபத்தில் இடம்பெற்றதோடு, இதில் சிறப்புக் கருத்துரையாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இதில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு குறித்து இங்கு தெளிவூட்டப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தியின் Economic Blueprint பொருளாதார திட்டம் மற்றும் சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி கொள்கை பிரகடனம் என்பன இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டன.