நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்..!

தங்கல்லையில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்து நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன இன்று (28) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிப் பேரணிக் கூட்டத்தில் மேடை ஏறினார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் தங்கல்லையில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போதே அவர் இவ்வாறு இணைந்து கொண்டார்.