ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை கூட்டம் இன்று கொட்டகலை CLFயில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தேசிய சபையில் கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

தேசிய சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சத்திடப்படவுள்ளது.