குதிரை சவாரி செய்த 16 வயது யுவதிக்கு நேர்ந்த சோகம்!

நுவரெலியாவில் மட்டக்குதிரை சவாரி சென்ற வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்து வைத்தியசாலையில்.

நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் மட்டக்குதிரை சவாரி செய்து கொண்டிருந்த இத்தாலிய பிரஜை ஒருவர் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் (06) திகதி 16 பேர் கொண்ட குழுவினருடன் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் பல இடங்களையும் சுற்றிப்பார்த்த நிலையில் வெள்ளிக்கிழமை நுவரெலியா நாகரசபை மைதானத்திற்கு அருகில் மட்டக்குதிரை சவாரியில் ஈடுபடும் போது 16 வயதுடைய பெண் சவாரி செய்த மட்டகுதிரை திடீரென முரட்டுத்தனமாக வேகமாக சென்றதில் தவறி விழுந்து விலா எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக நுவரெலியா சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியாவிற்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் மட்டக்குதிரை சவாரி செய்யும்போது பாதுகாப்பு தலைக்கவசம் அணியாததும் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது என்றும் இதுபோன்று மட்டக்குதிரையில் இருந்து தவறிவிழுவது இது முதல்முறையல்ல என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இந்த சம்பவங்களுக்கு எதிர் வரும் காலங்களில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார் .

வி.தீபன்ராஜ்