தமிழக மீனவர்கள் 22 பேர் கைது..!

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து நேற்று மன்னார் தென் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் மூலம் (02) இந்திய மீன்பிடி படகுகளுடன் (22) பேர் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் நாட்டின் கடற்பகுதியை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் 22 இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.