திறைசேரி செயலாளர் மற்றும் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான இடைக்கால நிவாரணம் தொடர்பாக திறைசேரி செயலாளர் திரு.ஸ்ரீவர்தனவுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட சமூகத்தினரை உள்வாங்கக்கூடிய ஏனைய நலன்புரி நலன்கள் குறித்தும் ஆராயப்பட்டது.