இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார். அவருக்கு வயது 71.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுமான் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த மாதம் நாடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து வடோதராவில் உள்ள பைலால் அமீன்  பொது மருத்துவமனையில் (BAGH) -ல் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அங்கு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

கெய்க்வாடின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் தனது பங்களிப்பிறகாக என்றென்றும் நினைவுக்கூரப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.