வாகன இறக்குமதிக்கு அனுமதி

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் எனவும் இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதை தொடர்ந்தும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தனிப்பட்ட பாவனைக்கான வாகன  இறக்குமதிக்கான அனுமதியை 2025 முதல் காலாண்டில் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.