இலங்கை-இந்திய அணிக்கு இடையிலான முதலாவது T20 போட்டி இன்று..!

இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது.

குறித்த போட்டிக்கான சகல டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மைதானத்துக்கோ அல்லது டிக்கெட் விற்பனை செய்யும் இடத்துக்கோ ரசிகர்களை வர வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக மைதான நுழைவாயில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.