இராணுவ தளபதியினால் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள இரண்டு இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களை 23 ஜூலை 2024 அன்று தனது அலுவலகத்திற்கு அழைத்தார். இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்புள்ள தடகள வீரரான பணிநிலை சார்ஜன் அருண தர்ஷன எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தனது இடத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈட்டி எறிதல் வீராங்கனை பணிநிலை சார்ஜன் தில்ஹானி லேகம்கே தனது உலக தடகள தரவரிசையின் அடிப்படையில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற வாய்ப்புபெற்றுள்ளார். 30 ஜூன் 2024 அன்று தகுதிக்கான் காலம் முடிவடைந்ததுடன் மேலும் சமீபத்திய போட்டிகள் அவர் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது உலக தரவரிசையில் 26வது இடத்தில் உள்ள தில்ஹானி லேகம்கே, ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் 32 தடகள வீரர்களில் ஒருவர்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி இரண்டு விளையாட்டு வீரர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக தனது பெருமையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை அவர் பாராட்டினார், இது உலகின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வில் அவர்களுக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல் இலங்கை இராணுவத்திற்கும் நாட்டிற்கும் கௌரவத்தையும் கொண்டு வந்ததுள்ளது.

வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அவர்கள் தயாராகும் அவர்களுக்கு முழு ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவதாக இராணுவத் தளபதி உறுதியளித்தார். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி வழங்கி நிகழ்வு நிறைவு பெற்றது.