கட்டுமானத் துறை தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற 262 பேருக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று (23) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.

அவர்கள்; இம்மாதம் 27 முதல் 30ஆம் திகதிக்குள் இஸ்ரேல் செல்ல உள்ளனர்.