மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தை பார்வையிட்ட செந்தில் தொண்டமான்!

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பொது நூலகத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டதோடு, அதன் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மட்டக்களப்பின் அடையாளமாக விளங்கும் இந்நூலகத்தை இலங்கையின் மிகப் பெரிய நூலகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.